வயலில் டிராக்டர் ஓட்டியவாறு விவசாயிகளிடம் வாக்குசேகரித்தார் ஆரணி நாடாளுமன்ற பாமக வேட்பாளர் கணேஷ்குமார்

Published: 29/03/2024 14:33 PM Updated: 29/03/2024 14:33 PM
Ads
news-banner

வந்தவாசி அடுத்த தென்னாங்கூர்,புலிவாய், சளுக்கை வெண்குன்றம், மும்முனி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்டகிராமங்களில் தீவிரவாக்குசேகரிப்பில்ஈடுபட்டநாடாளுமன்றத்தொகுதிவேட்பாளர்கணேஷ்குமார், 100 நாள்வேலை த்திட்டத்திற்கு தற்போது உயர்த்தப்பட்ட ஊதியத்தை குறிப்பிட்டு பேசினார். அந்த ஊதியம் நேரடியாக பயனாளிகளின் வங்கிகணக்கிற்கே வரவுவைப்பதை எடுத்துக்கூறினார், தானும் ஒரு விவசாயி விவசாயிகளின் சிரமங்கள் தனக்கு தெரியும் எனகூறிய அவர்வயலில் சேடை ஓட்டிய வாறு விவசாயிகளிடம் வாக்குசேகரித்தார். திமுக தேர்தல் அறிக்கையில் சிலிண்டர் 500 ரூ குறைப்பேன் எனசொல்கிறார்கள், ஏற்கனவே அவர்கள் சொன்ன  100ரூ குறைக்கவில்லை அவர்களை இன்னுமா நம்புகிறீர்கள் என கேள்விஎழுப்பினார். வாக்குசேகரிப்புக்கு சென்ற அவருக்கு பல கிராமங்களில் ஆரத்திஎடுத்து வரவேற்பு அளித்தனர்.

 

பாமகநிர்வாகிகள்மண்னப்பன், நகர பாமக செயலாளர்வரதன் ,மாவட்டபாமக செயற்குழுஉறுப்பினர் கராத்தேசரவணன், இந்தியஜனநாயககட்சி மாவட்டதலைவர் ஜெகந்நாதன், கீழ்புத்தூர்தசரதன், ஒன்றிய துணை சேர்மன்பாபு அமமுக மாவட்ட செயலாளர் வரதராஜன், வழக்கறிஞர் வெங்கடேசன் தெள்ளார்கன்னியப்பன் பாஜக முத்துலிங்கம்,  குருலிங்கம்  உள்ளிட்ட ஏராளமானோர் உடனிருந்தனர்